செல்லப் பிராணிகளை வளர்த்தல்
வாடகை குடியிருப்பில் வசிக்கும் எவரும் பொதுவாக கினிப் பன்றிகள், வெள்ளெலிகள், கேனரிகள் அல்லது மீன்கள் போன்ற சிறிய விலங்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பெரிய விலங்குகளை (பூனைகள் அல்லது சிறிய நாய்கள் உட்பட) வளர்ப்பது வாடகை ஒப்பந்தத்தில் தடைசெய்யப்படலாம். சத்தத்தை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தான விலங்குகளையும் வீட்டு உரிமையாளர்கள் தடை செய்யலாம். மேலும், செல்லப் பிராணி உரிமையாளர்கள் விலங்கு நலச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சில விலங்குகளை (முயல்கள் போன்றவை) தனியாக வைத்திருக்கக்கூடாது. கூண்டு அளவு மற்றும் உபகரணங்களுக்கான குறைந்தபட்ச தேவைகளும் உள்ளன. பல விலங்குகளை (அயல்நாட்டு விலங்குகள்) சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யவே அனுமதிக்கப்படுவதில்லை. மற்றவற்றுக்கு கால்நடை அலுவலகத்திலிருந்து சிறப்பு அனுமதி தேவை.