குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம்
பகல் நேரம் முழுவதும் குழந்தைகளைப் பராமரிப்பது குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் (Kitas, Kinderkrippen). இங்கு 3 மாதம் தொடக்கம் பாடசாலை வரையுள்ள பிள்ளைகள் பராமரிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகங்கள் பள்ளி வயதுடைய பிள்ளைகளையும் (பாடசாலைக்கு முன்னும் பின்னும் மற்றும் மதியமும்) பராமரிக்கின்றன. இங்கு இடம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருப்பதால் பெற்றோர் இயலுமானவரை முன்கூட்டியே பதிய வேண்டும். இதற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசப்படும், மேலும் அதன் ஒரு பகுதியை கண்டோனும் மற்றும் வதியும் கிராமசபையும் பொறுப்பேற்கின்றன. குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் அல்லது அப்பென்செல் அவுசர்ரோடன் சமூக பாதுகாப்பு அலுவலகம் இங்கு பதியும் வசதிகளையும் கட்டணத்தையும் அறியத் தரும்.
இடது, தொடர்பு
பராமரிப்பு நிதியை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்